என்னென்ன தேவை?
- புழுங்கல் அரிசி-1 கப்
- துவரம்பருப்பு-முக்கால் கப்
- சீரகம், மிளகு- தலா 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு, உளுந்து-தலா 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
- நல்லெண்ணெய்-5 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய்-2
- உப்பு, கறிவேப்பிலை-தேவைக்கு
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி வேக விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் மிளகு, சீரகம் பொரித்து எடுத்து பொடியாக்கவும். சாதம், பருப்பு வெந்ததும் வடிதட்டுப் போட்டு வடி கட்டவும். வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி ஆற விடவும். கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்துச் சாதத்தில் போடவும். பொடித்த மிளகு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
Leave a comment
You must login or register to add a new comment.