என்னென்ன தேவை?
- சேமியா-100 கிராம்
- தயிர்-50 கிராம்
- பால்-50 மி.லி.,
- இஞ்சித் துருவல்-ஒரு டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய்-2
- திராட்சை, மாதுளை முத்துக்கள்-தலா ஒரு கைப்பிடி
- ஆப்பிள் துண்டுகள்-3 டேபிள்ஸ்பூன்
- கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு-தலா கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை-சிறிதளவு
- பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
- எண்ணெய், உப்பு-தேவைக்க
எப்படி செய்வது?
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், பச்சை மிளகாய்,
பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை இந்தத் தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதைச் சேமியாவில்
சேர்த்துக் கலந்து பால், பழங்களைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
Leave a comment
You must login or register to add a new comment.